நான் பள்ளி கூடங்களில் டிஜிட்டல் கன்டென்ட் விற்கும் ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர். நண்பர் ஒருவர் ஒரு நபரின் நம்பரை கொடுத்து, இவரை சென்று பாருங்கள் என்று refer செய்தார். நான் அவருடன் அலைபேசியில்/கைபேசியில்/செல்பேசியில் {செல்போன் என்று சொல்வது வசதியாகத்தான் இருந்தது) பேசினேன்.
சார், உங்களுக்கு ஸ்கூல் இருப்பதாக என் நண்பர் கூறினார். உங்கள் ஸ்கூலில் டிஜிட்டல் கன்டென்ட் போடுவது தொடர்பாக உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று கூறினேன். ஆமாம் எங்களிடம் பெரிய ஸ்கூல் இருக்கிறது, நீங்கள் நேரில் வாருங்கள் என்று கூறினார்.
நான் இருப்பதோ சென்னையில் அவர் இருப்பதோ திருநெல்வேலி என்றார். சரி என்று அடுத்த வாரத்தில் திருநெல்வேலிக்கு ஒரு டூர் போட்டேன். அவர் மட்டுமல்லாது வேறு சில ஸ்கூல்களையும் பார்க்க திட்டமிட்டேன். திருநெல்வேலி சென்றவுடன் அவருக்கு ஒரு போன் செய்தேன்.
சார் உங்களை எங்கே வந்து சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். திருநெல்வேலியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடம் சொன்னார். (நாகர்கோயில் பக்கம் என்று முதலிலேயே சொல்லி இருக்கலாம்)
ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு நாகர்கோயில் தாண்டி திருவனந்தபுரத்திற்கு சற்று முன்னதாக ஒரு இடத்தில அவரை சந்தித்தேன். என்னுடைய productஇன் சிறப்பம்சங்களை எல்லாம் கூறி முடித்த பின் சொன்னார்
"நீங்கள் சொல்வது எல்லாம் அற்புதமாக இருக்கின்றது, அனால் என்னிடம் உள்ள ஸ்கூலில் இன்ஜினியரிங் தான் சொல்லி கொடுக்கிறோம்" என்றார். எனக்கு புரிய வில்லை.
பின்னர் அவர் சொன்னார் "நாங்கள் இன்ஜினியரிங் collegeஐ தான் ஸ்கூல் என்று சொல்வோம் என்றார். எனக்கு மயக்கமே வந்து விட்டது. இந்த மனிதர் ஸ்கூல் என்று சொன்னதை நம்பி 600 கிலோமீட்டர் வந்த என்னை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்றே எனக்கு தெரியவில்லை.
நீங்களே சொல்லுங்கள்....................
தொடர்ந்து எழுதுங்கள்..உங்கள் எழுத்து நடை நல்லாயிருக்குங்க..
பதிலளிநீக்கு